search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் பலி"

    • பழனி அருகே தாளையம் பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பழனி:

    உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி இந்திராவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. அவர்களை தூத்துக்குடியில் இருந்து காரில் அழைத்து வந்துள்ளார்.

    பழனி அருகே தாளையம் பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    படுகாயம் அடைந்த மோகன்ராஜ், இந்திரா, வன்னியராஜ் ஆகியோர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சாமிநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருசக்கர வாகனம் மீது வேன் எதிர்பாராத விதமாக மோதியது.
    • பூங்கொடி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    டி.என்.பாளையம்:

    கோபி அருகே உள்ள கூகலூர் கிரீன் நகரை சேர்ந்தவர் மணி (வயது 55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (50).

    இன்று காலை மணி தனது மனைவியுடன் டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூருக்கு வேலைக்காக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார். பூங்கொடி இரு சக்கர வாகனத்தின் பின் பகுதியில் அமர்ந்து வந்தார்.

    இதை தொடர்ந்து அவர்கள் டி.என்.பாளையம் கொன்னகொடிக்கால் என்ற பகுதியில் சென்றனர். அப்போது அங்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் பின்னால் சென்றது.

    அந்த வேனை கூகலூர் அருகே உள்ள தாழைக்கொம்புதூர் கொன்னமடையை சேர்ந்த இளையகுமார் (30) ஓட்டினார். திடீரென மணி மற்றும் அவரது மனைவி பூங்கொடி சென்று கொண்டு இருந்த இருசக்கர வாகனம் மீது வேன் எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மணியின் மனைவி பூங்கொடி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மேலும் தூக்கி வீசப்பட்ட மணி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். காயம் அடைந்த மணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்பு லன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    டி.என்.பாளையம் அருகே இன்று காலை கணவர் கண் முன்னே மனைவி விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • கோகிலாம்பாள், கபிஸ்தலம் அருகே உள்ள ஒரு கடையில் கடிகாரம் மற்றும் செல்போன் ரிப்பேர் கடை வைத்து நடத்தி வந்தார்.
    • கோகிலாம்பாள் உடல் முழுவதும் தீப்பிடித்து அவர் கடையிலேயே தீயில் கருகி இறந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள விசித்திரராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் பிரபாகரன் மனைவி கோகிலாம்பாள்(வயது 33). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபாகரன் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கோகிலாம்பாள், கபிஸ்தலம் அருகே உள்ள மேல கபிஸ்தலம் கொத்த தெரு பகுதியில் உள்ள ஒரு கடையில் கடிகாரம் மற்றும் செல்போன் ரிப்பேர் கடை வைத்து நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் கோகிலாம்பாள் தனது கடையில் செல்போனை சார்ஜில் போட்டபடியே செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென செல்போன் வெடித்து தீ பிடித்தது.

    இதில் கோகிலாம்பாள் உடல் முழுவதும் தீப்பிடித்து அவர் கடையிலேயே தீயில் கருகி இறந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கியாஸ் அடுப்பை பற்ற வைத்தபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கோனாமேடு பகுதியை நகரை சேர்ந்தவர் விமலா (வயது 45) அதே பகுதியில் வீட்டில் சமைத்து எடுத்து சென்று அருகில் ஓட்டல் கடை வைத்து விற்பனை செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது தீப்பற்றி படுகாயம் அமைந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று விமலா பரிதாபமாக இறந்தார்.

    • சம்ப வத்தன்று மதியம் ஜோதி துணி துவைத்து விட்டு துணியை அங்கு வழக்கம் போல் காய வைக்கும் கம்பியில் போட்டுள்ளார்.
    • அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசி மயக்கம் அடைந்து ள்ளார்.

    தாளவாடி:

    தாளவாடி அடுத்த பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (50) கூலித்தொழிலாளி. இவரது மகள் ஜோதி (26). இவருக்கும் கர்நாடக மாநிலம் சிக்கமங்களூர் மாவட்டம் எம்சள்ளி கிராமத்தை சேர்ந்த சிவராஜ் (33) என்பவருக்கும் கடந்த 6 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

    இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாளவாடி அடுத்த பாளையம் கிராமத்தில் தனது தந்தை வீட்டில் 8 மாதமாக குழந்தையுடன் ஜோதி வசித்து வந்தார்.

    இந்நிலையில் சம்ப வத்தன்று மதியம் ஜோதி துணி துவைத்து விட்டு துணியை அங்கு வழக்கம் போல் காய வைக்கும் கம்பியில் போட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசி மயக்கம் அடைந்து ள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே ஜோதி இறந்து விட்டதாக தெரி வித்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோத னைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

    • கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தந்தை வீட்டில் 8 மாதமாக குழந்தையுடன் ஜோதி வசித்து வந்தார்.
    • மின்சாரம் தாக்கி தூக்கி வீசி மயக்கம் அடைந்துள்ளார்.

    தாளவாடி:

    தாளவாடி அடுத்த பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (50) கூலித்தொழிலாளி. இவரது மகள் ஜோதி (26). இவருக்கும் கர்நாடக மாநிலம் சிக்கமங்களூர் மாவட்டம் எம்சள்ளி கிராமத்தை சேர்ந்த சிவராஜ் (33) என்பவருக்கும் கடந்த 6 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

    இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாளவாடி அடுத்த பாளையம் கிராமத்தில் தனது தந்தை வீட்டில் 8 மாதமாக குழந்தையுடன் ஜோதி வசித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் ஜோதி துணி துவைத்து விட்டு துணியை அங்கு வழக்கம் போல் காய வைக்கும் கம்பியில் போட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசி மயக்கம் அடைந்துள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே ஜோதி இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரவு பெய்த மழையால் விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது.

    இந்த ஓட்டலில் உள்ள சமையல் கூட சுற்றுச்சுவரின் ஒரு பகுதி நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக இடிந்து விழுந்தது.

    இடிந்து விழுந்த கட்டிட கழிவுகளை அப்புறப்படுத்தும் பணி இன்று நடந்தது. ஓட்டல் உரிமையாளர் சலவன் பேட்டையை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 50). கருகம்புத்தூரை சேர்ந்த வெண்ணிலா, மற்றொரு பெண் ஆகியோர் பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் கட்டிட இடிபாடுகளை அகற்றிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக மீதி இருந்த சுவர் இடிந்து பணியில் ஈடுபட்டவர்கள் மீது விழுந்தது.

    இடிபாடுகளில் சிக்கி 3 பேரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கும்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    மூன்று பேரில் பெண் ஒருவர் பாதி வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    ராமமூர்த்தி மற்றும் வெண்ணிலாவுக்கு அடுக்கம்பாறை வரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சியில் இருந்து நாமக்கல் வழியாக பெங்களூரு நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
    • பிற்பகல் 3.25 மணியளவில் பொம்மைக் குட்டைமேடு பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ் வந்தபோது அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    நாமக்கல்:

    திருச்சியில் இருந்து நாமக்கல் வழியாக பெங்களூரு நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. நேற்று பிற்பகல் 3.25 மணியளவில் பொம்மைக் குட்டைமேடு பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ் வந்தபோது அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் அந்த வாகனத்தில் சென்ற பேளுக்குறிச்சி மலைவேப்பன்குட்டையைச் சோ்ந்த ராஜேந்திரனின் மனைவி ஜீவா(40) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் வந்த நல்லுசாமியின் மனைவி கோமதி (27) என்பவா் பலத்த காயமடைந்தாா்.

    அங்கிருந்த வா்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த 5 நாட்களாக சிமெ ண்ட் சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது.
    • கண்ணிமைக்கும் நேரத்தில் எந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே வில்வநத்தம் பகுதியில் கடந்த 5 நாட்களாக சிமெ ண்ட் சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பணியாளர்கள் காலை முதல் மாலை வரை சாலை போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கம்போல் நேற்று காலை இந்த பணி தொடங்கியது. இதில் கிளியனூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மனைவி சரளா (வயது39) ஈடுபட்டு வந்தார். மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது அங்கு நிறுத்தியிருந்த கலவை எந்திரத்தில் சரளாவின் புடவை எதிர்பாராத விதமாக மாட்டிக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் எந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். உடனே அங்கு இருந்த சக பணியாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரளா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ரேவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் ரேவதியை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை யமுனா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 53). இவர் பூந்தமல்லி -பாரிவாக்கம் சந்திப்பு, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக கட்டுமான பொருட்களை ஏற்றிவந்த லாரி திடீரென சாலையோரம் நடந்து சென்ற ரேவதி மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய ரேவதியின் கால்கள் இரண்டும் நசுங்கியது. இதில் அவர் அலறி துடித்தார்.

    விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் ரேவதியை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இதுபற்றி அறிந்ததும் ரேவதியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அவர்கள் விபத்து ஏற்படுத்திய லாரியை சிறை பிடித்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ரேவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • பெண் பணியில் இருந்தபோது எந்திரத்தில் சேலை இறுக்கி கழுத்து இறுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • புகாரின் பேரில் க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள முத்தனம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த சேகர் மனைவி சிவனேஸ்வரி. (50). இவர் வைகை அணை சாலையில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று அவர் பணியில் இருந்தபோது எந்திரத்தில் சேலை இறுக்கி கீேழ விழுந்தார். இதில் கழுத்து இறுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் தங்கபாண்டி கொடுத்த புகாரின் பேரில் க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆட்டோவுக்குள் இருந்த ஷைலேஷ், அவரது மனைவி, மகன், மகள் மற்றும் ஆட்டோவின் டிரைவர் ஆகிய 5பேரும் ஆற்றுக்குள் விழுந்தனர்.
    • ஆற்றுக்குள் ஆட்டோ கவிழ்ந்து பெண் பலியானது மட்டுமின்றி, அந்த பெண்ணின் மகன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் வெண்மணி பகுதியை சேர்ந்தவர் ஷைலேஷ்(வயது43). இவரது மனைவி ஆதிரா (31). இவர்களது மகள் கீர்த்தனா(11), மகன் காசிநாத்(3). நேற்று ஷேலேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆட்டோவில் மாவேலிக் கரைக்கு சென்றார்.

    ஆட்டோவை சபானோ சஜூ என்பவர் ஓட்டிச் சென்றார். மாவேலிக்கரை அருகே உள்ள கொல்லக்கடவு என்ற பகுதியில் சென்ற போது, அவர்கள் சென்ற ஆட்டோ திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, அச்சன்கோவில் ஆற்றுக்குள் கவிழ்ந்தது.

    ஆட்டோவுக்குள் இருந்த ஷைலேஷ், அவரது மனைவி, மகன், மகள் மற்றும் ஆட்டோவின் டிரைவர் ஆகிய 5பேரும் ஆற்றுக்குள் விழுந்தனர். இந்த பயங்கர விபத்தை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்தனர். அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் ஆதிரா படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தார். ஆற்றுக்குள் விழுந்துகிடந்த ஷைலேஷ், அவரது மகள் கீர்த்தனா, ஆட்டோ டிரைவர் சபானோ சஜூ ஆகிய 3 பேரையும் மீட்டனர். ஆட்டோ விழுந்த ஆற்றில் தண்ணீர் அதிகளவில் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் ஷைலேஷின் மகன் காசிநாத் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டான். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் ஆதிராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். காயமடைந்த ஷைலேஷ் உள்ளிட்ட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் காசிநாத்தை போலீசாரும், மீட்பு படையினரும் தொடர்ந்து தேடி வருகின்றனர். ஆற்றுக்குள் ஆட்டோ கவிழ்ந்து பெண் பலியானது மட்டுமின்றி, அந்த பெண்ணின் மகன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×